தருமபுரி பச்சமுத்து மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் கணிதத் துறை சார்பில் கணிதத் தொழில்நுட்பம் குறித்த தேசியக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தாளாளர் ப. பாஸ்கர் தலைமை வகித்தார். துணைத் தாளாளர் பா. சங்கீத்குமார், முதல்வர் பிலோமினா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கணிதத் துறைத் தலைவர் ஆர். தங்கமணி வரவேற்றார். பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் வி. முத்துலட்சுமி, ஆந்திரப் பேராசிரியர் வி. சந்திரன், திருவள்ளூர் பேராசிரியர் ஆர். ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கருத்தரங்கில் பேசினர். கருத்தரங்கு மலர் வெளியிடப்பட்டது. பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.முடிவில் பேராசிரியை சத்யா நன்றி கூறினார்.