தருமபுரி அருகேயுள்ள ஆலிவாயன் கொட்டாய் அரசு நடுநிலைப் பள்ளியில் காந்தி பிறந்தநாள் விழா, மகாத்மா காந்தி நற்பணி மன்றம் சார்பில் அண்மையில் நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் ச.ஏகாம்பரம் தலைமை வகித்தார். உதவி ஆசிரியை எஸ்.கே.சுமதி வரவேற்றார். மகாத்மா காந்தி நற்பணி மன்றத் தலைவர் அ.ப.நரசிம்மன், காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, காந்தியின் இளமைப் பருவம், தென்னாப்பிரிக்காவில் காந்திக்கு கிடைத்த அனுபவங்கள், இந்திய விடுதலைக்காக அவர் நடத்திய அறவழிப் போராட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. காந்தி நற்பணி மன்ற மாவட்டச் செயலர் எம்.பரமசிவம், மகளிரணிச் செயலர் கே.ராஜம்மாள், உதவி ஆசிரியை எம்.காமாட்சி மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.