சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு

தருமபுரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும்

தருமபுரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் நிகழாண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கும் காலக்கெடு அக். 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சி மற்றும் ஜெயின் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.  1 முதல் 12-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகள் புதியது மற்றும் புதுப்பித்தலுக்கு ஆன்லைனில் ‌h‌t‌t‌p://‌s​c‌h‌o‌l​a‌r‌s‌h‌i‌p.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உரிய காலத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com