தருமபுரி செந்தில்குமார் பல்பொருள் அங்காடியில் இனிப்பகம், காய்கறி விற்பனைப் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது.
தருமபுரி சித்த வீரப்பச்செட்டி தெருவில் அமைந்துள்ள செந்தில்குமார் பல்பொருள் அங்காடியில் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்) புதிதாக இனிப்பகம், விரைவு உணவகம் மற்றும் காய்கறிகள் விற்பனைப் பிரிவு தொடங்கப்பட்டது.
இப் புதிய பிரிவை செந்தில்குமார் குழுமத் தலைவர்
கே. குமார் தொடக்கி வைத்தார். அதேபோல இனிப்பகத்தை, எஸ்.வி.காளிசெட்டியர் தொடக்கிவைத்தார். புதிதாக தொடங்கப்பட்டுள்ள விற்பனைப் பிரிவுகளில் அனைத்து வகையான இனிப்புகள், கார வகைகள், கேக் உள்ளிட்டவை கிடைக்கும் என அங்காடி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விழாவில், செந்தில்குமார் குழும நிர்வாக இயக்குநர் மனோகரன், கே. சக்திவேல், ஜெயராமன், வெங்கட்ராமன், தலைமை பொது மேலாளர் கனகராஜ், பொது மேலாளர் வாசுதேவன் மற்றும் தொழிலதிபர்கள், வியாபாரிகள்,
வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.