தருமபுரி

பெரியார் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவிப்பு

DIN

தருமபுரி மாவட்டத்தில் திராவிடர் கழகம்,  திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
திராவிடர் கழகம் சார்பில்,  தருமபுரி பெரியார் மன்ற வளாகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு,  மாநில அமைப்புச் செயலர் ஊமை ஜெயராமன் தலைமையில், மாநில பகுத்தறிவாளர் கழக செயலர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்டச் செயலர் மாதன், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
அதிமுக சார்பில், மாநில  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன், விவசாய அணி தலைவர் டி.ஆர்.அன்பழகன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
திமுக சார்பில், அக் கட்சியின் மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், சட்ட, திட்டத் திருத்தக் குழு இணைச் செயலர் இரா.தாமரைச் செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.மனோகரன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல, அமமுக சார்பில், மாவட்டச் செயலர் டி.கே.ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள், எம்.முனுசாமி, எம்.ஜி.மணிவண்ணன் உள்ளிட்டோர் பெரியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல, பல்வேறு கிராமங்களிலும் பெரியார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாள் கொண்டாடப்பட்டன.
அரூரில்...
 அரூரை அடுத்த சுண்டாங்கிப்பட்டியில் பெரியார் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
 அரூர் வட்டம்,  சுண்டாங்கிப்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரம் வளாகத்தில் உள்ள பெரியார் உருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதில், திமுக  ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணை அமைப்பாளர் எஸ்.ராஜேந்திரன்,  கட்சி நிர்வாகிகள் ராஜாமணி,  வாசுதேவன், கு.தமிழழகன், பொன்னுசாமி,  மேகராஜ், திருமால், வழக்குரைஞர் 
பொதிகைவேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
அரூர் பேருந்து நிலைய வளாகத்தில் திமுக நகரச் செயலர் முல்லை ஆர்.என்.செழியன் தலைமையில்,  பெரியார் உருவப் படத்துக்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இதில், ஊராட்சி முன்னாள் தலைவர் ஜி.திருமால்செல்வன், திமுக பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் செ.கிருஷ்ணகுமார், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மு.கா.முகமதுஅலி, பேட்டை சேகர், தொ.மு.ச.வைச் சேர்ந்த உதயசூரியன், செல்வம், விண்ணரசன், கோடீஸ்வரன், கே.மதி, ராதா ஸ்டாலின் , சென்னகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல, வேப்பிலைப்பட்டி,  கடத்தூர், தாளநத்தம், செங்குட்டை, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, சிந்தல்பாடி, மொரப்பூர் உள்ளிட்ட இடங்களில் திமுக மற்றும் திராவிடர் கழகத்தினர் பெரியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஒசூரில்...
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஒசூரில் பெரியாரின் 140-ஆவது  பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில், ஒசூர் வட்டாட்சியர் அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்டச் செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் பெரியார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒசூர் நகர திமுக பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா, மாநில சிறுப்பான்மைப் பிரிவு துணைச் செயலாளர் விஜயகுமார், மாவட்ட அவைத் தலைவர் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்ட துணைச் செயலாளர் தனலட்சுமி,  மாவட்ட பிரதிநிதி செளந்தரராஜன், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஞானசேகரன், துணை அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் எல்லோரா மணி, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் ராஜா, தொமுச மாவட்டச் செயலாளர் மஞ்சுநாத், முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் நடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரையில் திராவிடர் கழகம், திமுக மற்றும் பல்வேறு  கட்சிகளின்சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
முன்னதாக  ஊத்தங்கரை நான்குமுனைச் சந்திப்பில் உள்ள பெரியார் உருவச் சிலைக்கு மாலை அனிவித்து  மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சிக்கு  வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.இதில் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு பெரியாரின் சிறப்புகள் பற்றி பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT