தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று தேர்வு செய்யப்பட்ட 145 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
முகாமில் தருமபுரி, நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, ஒசூர் மற்றும் சென்னையைச் சேர்ந்த 15 தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை முடித்தோர் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், பட்டயம் பெற்றவர்கள், தையல் பயிற்சி முடித்தோர் என 578 பேர் முகாமில் பங்கேற்றனர். இவர்களில் 4 பேர் திறன் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் 141 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இவற்றை மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சண்முகம் வழங்கினார். மற்றவர்களின் விண்ணப்பங்கள் தனியார் நிறுவனங்களின் பரிசீலனையில் உள்ளன. முகாமில், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.