தருமபுரியில் கோயிலில் வழிபாட்டுக்கு வந்த பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை மர்ம நபர்களால் திருடிச் சென்றனர்.
தருமபுரி அருகே சவுளுப்பட்டியைச் சேர்ந்த மணி மனைவி லட்சுமி(50). இவர் சனிக்கிழமை தருமபுரி கோட்டை மல்லிகார்ஜூன சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்றார்.
அப்போது, கோயிலிலிருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி, லட்சுமி அணிந்திருந்த சுமார் ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தருமபுரி நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.