காவிரி மிகை நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் நிரப்ப வலியுறுத்தி, மொரப்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் சனிக்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
மொரப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் பாமக அமைப்புச் செயலர் செல்வகுமார், மாநில துணைப் பொதுச் செயலர் வெங்கடேஸ்வரன், உழவர் பேரியக்க மாநிலத் தலைவர் இல.வேலுசாமி, கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.வி.இமயவர்மன், மாவட்டத் தலைவர் மதியழகன், உழவர் பேரியக்க மாவட்டத் தலைவர் அய்யப்பன், மாவட்டச் செயலர் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.