74 பணியிடங்களுக்கு ஊர்க் காவல்படை வீரர்கள் தேர்வு

தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 74 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளதால்

தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 74 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளதால் ஆர்வமுள்ளோர் வரும் அக். 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கட்டளை அதிகாரி ஜெ.ஏ. தண்டபாணி அழைப்புவிடுத்துள்ளார்.
18 வயது நிரம்பிய, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது தேர்ச்சி பெறாத இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளோர் தருமபுரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே முதல் மாடியில் உள்ள மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அனைத்துச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வரும் செப். 24 முதல் அக். 3ஆம் தேதி வரை நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களை அறிய 04342 260114 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com