தருமபுரி அருகே முத்துக்கவுண்டன் கொட்டாய், கடகத்தூர் நடுநிலைப் பள்ளிகளில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.
இதில் வட்டார கல்வி அலுவலர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் கெளரி ஆகியோர், மாணவ, மாணவியர் வளரிளம் பருவத்திலே சத்தாண உணவு உட்கொள்ள வேண்டியதின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பேசினர். முத்துக்கவுண்டன் கொட்டாய் பள்ளித் தலைமை ஆசிரியர் சிவக்குமார், கடகத்தூர் பள்ளித் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.
இந்த விழாவில் கீரை, பழ வகைகள், சுண்டல், கொள்ளு, எள், பருப்பு வகைகளால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவுப் பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.