காவிரி மிகை நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் நிரப்ப வலியுறுத்தி, அரூரில் பா.ம.க.சார்பில் திங்கள்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மழைக் காலங்களில் காவிரி ஆற்றின் மிகை நீரைக் கொண்டு தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை நிரப்ப வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து நீர் நிலைகளையும் தூர்வார வேண்டும். நீர்நிலைகளுக்கு வரும் நீர்வரத்துக் கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த கையெழுத்து இயக்கத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில், பா.ம.க. உழவர் பேரியக்க மாநிலத் தலைவர் இல.வேலுசாமி, கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலர் ஏ.வி.இமயவர்மன், உழவர் பேரியக்க மாவட்டச் செயலர் அய்யப்பன், மாவட்டத் தலைவர் முத்துசாமி, மாநில இளைஞர் அணி துணைச் செயலர் வன்னியப் பெருமாள் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.