தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருவோர் தங்களது குறைகளை வரும் அக். 5ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க, மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி அழைப்புவிடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து வரும் செப். 16ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஓய்வூதியர் சிறப்புக் குறைகேட்பு நாள் நடைபெறும்.