பாலக்கோடு பேருந்து நிலையம் எதிரில் பா.ம.க மற்றும் உழவர் பேரியக்கம் சார்பில் வீணாகக் கடலில் கலக்கும் காவிரி நீரை அனைத்து ஏரிகளிலும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதில் பா.ம.க. மாநில துணைத் தலைவர் பாடி செல்வம், முன்னாள் எம்எல்ஏ மற்றும் உழவர் பேரியக்க மாநிலச் செயலாளர் வேலுசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் ராஜசேகர், கிருஷ்ணன், வேலு, ஜான்பாஷா, ராஜவேல், சேகர், துரைராஜ், மாதையன், சிலம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.