பிளஸ் 2 பொதுத் தேர்வில் தருமபுரி செந்தில் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தப் பள்ளி மாணவ, மாணவியர் 322 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். தேர்வெழுதியதில் 55க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் 500க்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இந்த மாணவ, மாணவியரை, செந்தில் கல்விக் குழுமத் தலைவர் செந்தில் சி. கந்தசாமி, துணைத் தலைவர் கே. மணிமேகலை, நிர்வாக அலுவலர் சி. சக்திவேல் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தனர்.