தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பில் கேட்பாரற்றுக் கிடந்த பெட்டியை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பின் மையப் பகுதியில் வள்ளல் அதியமான், தமிழ் மூதாட்டி ஒளவையாருக்கு நெல்லிக்கனி வழங்குவதுபோல சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இச் சிலையின் கீழ் பகுதியில் சனிக்கிழமை பெட்டி ஒன்று கேட்பாரற்று நீண்ட நேரமாகக் கிடந்தது.
இதுகுறித்து தகவலின்பேரில், போலீஸார் நிகழ்விடம் சென்றனர்.
அந்தப் பெட்டியை சோதனை செய்ய வெடிகுண்டு சோதனை நிபுணர் குழு வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச் சோதனையில், அதில், வெடிபொருள்கள் ஏதுமில்லை எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீஸார் அந்தப் பெட்டியைச் திறந்து சோதனையிட்டனர். அதில், இரண்டு புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்துப் பெட்டியை கைப்பற்றிய போலீஸார்,அதை விட்டுச் சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.