சாலை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

பென்னாகரம் அருகே பழுதடைந்த வண்ணாத்திப்பட்டி - காட்டுநாயக்கனஅள்ளி சாலையை புதுப்பிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பென்னாகரம் அருகே பழுதடைந்த வண்ணாத்திப்பட்டி - காட்டுநாயக்கனஅள்ளி சாலையை புதுப்பிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பென்னாகரம் அருகே  வண்ணாத்திப்பட்டி பகுதியில் இருந்து காட்டுநாயக்கனஅள்ளி வரை செல்லும் 3 கி. மீ. சாலை  பழுதடைந்தது. இவ்வழியாக  நாய்க்குட்டை, குள்ளாத்திரம்பட்டி இணைப்பு, காட்டு கொட்டாய், பாப்பாரப்பட்டி இணைப்பு சாலை மற்றும் காட்டுநாயக்கன அள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம். இப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் புதிய சாலை அமைக்கும் பணியானது ஜல்லிக் கற்கள் மட்டுமே பதிக்கப்பட்டது.பின்னர் கடந்த இரு மாதங்களுக்கு மேலாகியும் சாலைப் பணிகள் முழுமையாக நடைபெறாமல் உள்ளன. இவ்வழியாக தங்கள் பகுதிக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியும், இரவு நேரங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுதாகி பாதியிலேயும் நின்று விடுகின்றன. 
முறையான சாலை  இல்லாததால் தங்கள்  பகுதிக்கு பள்ளி  வாகனங்கள் கூட வரமுடியாத நிலை உள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இச்சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com