கிணற்றில் விழுந்து பெண் சாவு

கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்து இளம்பெண் கல்பனா வியாழக்கிழமை உயிரிழந்தார்.

கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்து இளம்பெண் கல்பனா வியாழக்கிழமை உயிரிழந்தார்.
  பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சுங்கரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். லாரி ஓட்டுநர்.    இவரது மனைவி கல்பனா (31).  இந்த நிலையில்,  ராமச்சந்திரனுக்கு சொந்தமான விவசாயக் கிணற்றில் மின் மோட்டார் பழுது ஏற்பட்டிருந்ததாம்.
  இதையடுத்து,  கல்பனா உள்ளிட்ட அவரது உறவினர்கள் சிலர் காலை 9 மணியவில் திறந்தவெளி கிணற்றில் இருந்து மின் மோட்டாரை கயிறு வழியாக மேலே இழுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    மின் மோட்டார் கிணற்றில் இருந்து மேலே வரும் நிலையில்,  திடீரென கயிறு அறுந்து மின் மோட்டார் மீண்டும் கிணற்றுக்குள் சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக கல்பனாவின் காலில் மின் மோட்டாரை இழுத்த கயிறு சுற்றிக் கொண்டதாம்.  இதனால் கல்பனா கிணற்றில் விழுந்துள்ளார். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.  இது குறித்து கடத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com