கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி: பிப்.22-இல் நேர்காணல் தொடக்கம்

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல்

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் வருகிற பிப்.22-ஆம் தேதி தொடங்கி பிப்.28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 
இது குறித்து,   மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கால்நடைப் பராமரிப்புத் துறையில் தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு பிப்.22 முதல் 28-ஆம் தேதி வரை காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை தருமபுரி கால்நடை பெருமருத்துவமனை வளாகத்தில் (ராஜாஜி நீச்சல் குளம் எதிரில்) நடைபெற உள்ளது.
இப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அழைப்பாணை தனியாக அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள நாளில் அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், நேர்முக அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள், அழைப்பாணைகளை பிப்.20 மற்றும் 21 ஆகிய நாள்களில் தருமபுரி மாவட்ட மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் (கால்நடை பெருமருத்துவமனை வளாகம்) விண்ணப்பித்ததற்கான ஆதாரங்களுடன் நேரில் பெற்றுக்கொள்ளலாம். அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com