தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மௌன அஞ்சலி

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி  பாலக்கோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி  பாலக்கோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் முன்னாள் ராணுவ வீரர்கள், அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டு உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மௌன ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர், ஆசிரியர்கள், முன்னாள் ராணுவ வீரர்களான பி.எம்.முருகன், பொன்னுசாமி, ஜே.எம்.முருகன்,சிவாஜி, முனுசாமி, பி.கிருஷ்ணன்,
நாகராஜ், மாதையன் என முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். அரசு ஆண்கள் 
மேல்நிலைப்பள்ளியிலிருந்து மௌன ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.  காவல் ஆய்வாளர் விஸ்வநாதன், காவல் அதிகாரிகள், பொதுமக்கள்  கலந்துகொண்டு ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com