பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

அரூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரூர் இந்தியன் சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலத்தை பள்ளி மேலாளர் ஆறுமுகம் தொடக்கி வைத்தார்.
அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலம், வர்ணதீர்த்தம், பேருந்து நிலையம், கடைவீதி வழியாகச் சென்றது. இதில் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
இதில் பள்ளி முதல்வர் நிர்மலா ஸ்ரீ, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com