காரிமங்கலத்தில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம்

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள கிராமங்களில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது . 

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள கிராமங்களில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது . 
காரிமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட கெரகோடஅள்ளி, மொட்டலூர் மற்றும் நாகணம்பட்ட ஆகிய கிராமங்களில் திமுக மாவட்டச் செயலர் தடங்கம் பெ. சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமையில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் எழும்பூர் தொகுதி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.எஸ். ரவிச்சந்திரன் பங்கேற்று, கிராம மக்களிடம் குறைகள், கோரிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தார்.
மேலும், பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார். இக் கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் ஜி.வி. மாதையன், துணைச் செயலர் டி. சுப்ரமணி, வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர் ஆ. மணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.என்.வி. செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com