தருமபுரி

ஜெருசலம் பயணத்துக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

DIN

தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலம் பயணம் மேற்கொள்ள அரசு வழங்கும் நிதியுதவியை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறது. இத்திட்டத்தில் நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெறலாம். முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை, அனைத்து இணைப்புகளுடன், அஞ்சல் உறையில் "ஜெருசலம் புனிதப் பயணத்துக்கான விண்ணப்பம்' என குறிப்பிட்டு மேலாண் இயக்குநர், தமிழக சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கல்ச மஹால் பாரம்பரியக் கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-5  என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றார்.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT