பாலக்கோடு சீரியம்பட்டியில் எருதாட்டம்

பாலக்கோடு சீரியம்பட்டியில் பொங்கலையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற எருதாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட காளைகள்பங்கேற்றன.

பாலக்கோடு சீரியம்பட்டியில் பொங்கலையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற எருதாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட காளைகள்
பங்கேற்றன.
சீரியம்பட்டி,கோட்டூர்,பெல்ரம்பட்டி,பேவுஅள்ளி உள்பட 9-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற இந்த விழாவில் காளைகளை அலங்காரம் செய்து வாடிவாசல் வழியாக ஓடவிட்டனர். இந்த விழாவில்  200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 
பாலக்கோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர். மாரண்டஅள்ளி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com