தருமபுரி மக்களவைத் தொகுதித் தேர்தல், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளின் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பொருள்கள் வழங்குவதைத் தடுத்தல், தேர்தல் விதிமுறை மீறல்களை கண்காணித்தல் பணிகளுக்காக பறக்கும் படைகள்
அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மொரப்பூர் - தருமபுரி நெடுஞ்சாலையில், அரூர் வருவாய் கோட்டாட்சியர் ஜி.புண்ணியக்கோட்டித லைமையில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல், அரூர் - திருப்பத்தூர், திருவண்ணாமலை சாலையிலும் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.