பாலக்கோடு நகரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
அதில் 18 வயது நிறைவடைந்த புதிய வாக்காளர் அனைவரும் வாக்கு அளிக்க வேண்டும் எனவும், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தையும், அதன் தேவையையும், ஒலிபெருக்கியின் வாயிலாக தக்காளி மார்க்கெட் முதல் காவல் நிலையம் வரையில் முக்கிய வீதிகளின் வழியாக 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களின் மூலம் பேரணி நடை
பெற்றது.இதில் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் வட்டாட்சியர் ராஜா மற்றும் அதிகாரிகள்
கலந்து கொண்டனர்.