இடைத்தேர்தல்: பாப்பிரெட்டிப்பட்டியில் உழைப்பாளி மக்கள் கட்சி வேட்பு மனு தாக்கல்

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உழைப்பாளி மக்கள் கட்சியின் செய்தி

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உழைப்பாளி மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் சசிகுமார் (28) வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
தருமபுரி மாவட்டம், அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், அரூர் (தனி) தொகுதிக்கான  வேட்பு மனுக்களை அரூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கான வேட்பு மனுக்களை பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், பி.துறிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த உழைப்பாளி மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் சசிகுமார் (28), பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com