5 மாநில தேர்தல் முடிவு: காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்

மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்ததையடுத்து

மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்ததையடுத்து, கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி செவ்வாய்க்கிழமை கொண்டாடினர்.
மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநில தேர்தல் முடிவுகள், செவ்வாய்க்கிழமை வெளியாயின. இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்ததையடுத்து,  கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ஜேசு துரைராஜ், நாராயணமூர்த்தி,  மாநில செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், முன்னாள் நகரத் தலைவர் ரகமத்துல்லா, நிர்வாகி ஆறுமுக சுப்பிரமணி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
ஒசூரில்...
ஒசூரில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.  
இதில், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கவுள்ளது. மத்திய பிரதேசத்திலும் அக் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.
இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒசூரில் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்து,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.   ஒசூர் காந்தி சாலையில் உள்ள காந்தி சிலையருகே நடந்த இந் நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கி,  முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒசூர் நகர தலைவர் நீலகண்டன் முன்னிலை வகித்தார்.  மேலும் இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சூர்ய கணேஷ்,  நகர துணைத் தலைவர் சந்துரு, முருகன், பூனப்பள்ளி ஊராட்சி முன்னாள் தலைவர் சீனிவாச ரெட்டி, சுந்தரம், அக்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிப்பதால் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி செவ்வாய்க்கிழமை கொண்டாடினர். 
நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நகர தலைவர் விஜயகுமார், மாவட்ட துணைத் தலைவர் கே.ராமச்சந்திரன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் எஸ்.பூபதி, வடக்கு வட்டாரத் தலைவர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக,  நான்குமுனை சந்திப்பில் உள்ள காமராசர்,  ராஜீவ்காந்தி  திருவுருவ  சிலைகளுக்கு  மாலை அனிவித்து மரியாதை செலுத்தி, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் விவசாய அணி சின்னதம்பி, கோவிந்தசாமி,முத்துகவுண்டர், சிவப்பிரகாசம், கனி மற்றும் ஒன்றிய நகர  நிர்வாகிகள்  பலர்  கலந்துக்கொண்டனர். 
புகைபட விளக்கம்.11யுடிபி.2.ஊத்தங்கரையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடும் காங்கிரஸ் கட்சியினர்.
அரூரில்...
5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளை வரவேற்று, அரூரில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிஸோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றிப் பெற்றிருப்பதை வரவேற்று,  அந்தக் கட்சியினர் அரூர் பேருந்து நிலைய வளாகத்தில் பட்டாசுகளை வெடித்தும்,  இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதில், காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் ஆர்.சுபாஷ்,  முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் பி.அபரஞ்சி,  நகரத் தலைவர் கே.கணேசன்,  மாவட்ட துணைத் தலைவர் சி.வேடியப்பன், சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com