கிருஷ்ணகிரி முருகன் கோயிலில் கந்தசஷ்டி சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி  முருகன் கோயிலில் கந்தசஷ்டியையொட்டி,செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி  முருகன் கோயிலில் கந்தசஷ்டியையொட்டி,செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை,  சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது. கந்த சஷ்டியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நெய் விளக்கேற்றி வேண்டுதலை நிறைவு செய்தனர். இந்த நிகழ்வில்  கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com