கிருஷ்ணகிரி நாளந்தா சர்வதேசப் பொதுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நேருவை குறித்து கதைகள் மற்றும் அவரது அறிவுரைகள் எடுத்துரைக்கப்பட்டன. பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், நிர்வாக இயக்குநர்கள் கௌதமன், புவியரசன், முதல்வர் உமாஜோதீஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள்,குழந்தைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாரத் மெட்ரிக். பள்ளி
கிருஷ்ணகிரியில் உள்ள பாரத் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளியின் நிறுவனர் மணி தலைமை வகித்தார். தாளாளர் கிருஷ்ணவேணி மணி, மருத்துவர் சந்தோஷ்,முதல்வர் தமிழரசன், துணை முதல்வர் விஜயகுமார் ஆகியோர் பேசினர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சு, கட்டுரை, மாறுவேடப் போட்டி, கையெழுத்துப் போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவை பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஒருங்கிணைத்தனர்.