சூளகிரி அருகே திருமணத்துக்கு பெண் தராததால், விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
சூளகிரி அருகே உள்ள நல்லகானகொத்தப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (24), விவசாயி. இவர், உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால், பெண் வீட்டார் மறுக்கவே மனமுடைந்த ராஜேஷ், நல்லகானகொத்தப்பள்ளி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி காவல் உதவி ஆய்வாளர் ராமதாஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.