ஊத்தங்கரையை அடுத்த நாய்க்கனூரில் வேளாண் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின்கீழ் மானாவாரி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) கலா முகாமை தொடக்கிவைத்தார். மானாவாரி சாகுபடியின் முக்கியத்துவம், இயற்கை விவசாயம் குறித்து அவர் விளக்கமளித்தார்.இதில் வேளாண் அலுவலர் பிரபாவதி,துணை வேளாண்மை அலுவலர் சீனிவாசன் ஆகியோர் விளக்கினர். மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள்,விதை நேர்த்தி, உயிர் உரங்களின் பயன்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பம் குறித்து விஞ்ஞானி செந்தில்குமார் விளக்கமளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் செல்லகுமார் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பேசினார்.