ஒசூர் தம்பதி கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஒசூர் அருகே கலப்பு திருமணம் செய்த நந்தீஸ்- சுவாதி தம்பதியைக் கொலை செய்த வழக்கில் பெண்ணின் தந்தை, பெரியப்பா, மற்றும் அவரது உறவினர் ஆகிய 3 பேரைக் கைது செய்த ஒசூர் போலீஸார், அவர்களை கர்நாடக மாநில போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
கொலை நிகழ்ந்த இடத்துக்கு மூவரையும் அழைத்து சென்ற பெலகவாடி போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தி விடியோ பதிவு செய்தனர். திங்கள்கிழமை மாண்டியா நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்த பெலகவாடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகவுள்ள மூவரையும் தேடி வருகின்றனர்.