சர்க்கரை நோய் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரியில் மருத்துவப் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமை கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சென்னை டயாபடீஸ் சென்டர், நாட்டு நலப் பணித் திட்டம், அரிமா சங்கம் ஆகியன இணைந்து நடத்தின. அரிமா சங்கத் தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். அனைத்து ஆசிரியர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்டவைகள் குறித்து பரிசோதனை செய்யப்பட்டன. சென்னை டயாபடீஸ் சென்டரின் மருத்துவர் ஜெயகணேஷ், சர்க்கரை நோய் குறித்தும், உணவு முறைகள் குறித்தும் அறிவுரைகளை வழங்கினார்.