சூளகிரியில் பெண் கழுத்தை அறுத்து கொலை

சூளகிரியில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் வனப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது.


சூளகிரியில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் வனப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது.
சூளகிரி வனப் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தது குறித்து தகவலறிந்து அங்குச் சென்ற போலீஸார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சிவப்பு மற்றும் சந்தன நிறம் கலந்த சேலையும், மஞ்சள் நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். மேலும் அவரது அருகில் ஒரு பர்ஸ் இருந்தது. அதில் ஒரு செல் நம்பர் இருந்தது. அந்த பெண்ணின் கழுத்து அறுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன.
மேலும், அந்த பெண் கழுத்தை அறுத்தும், கல்லை போட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து சூளகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com