கிருஷ்ணகிரியில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு அதன் தலைவர் பத்மநாதன், சங்கரன் ஆகியோர் தலைமை வகித்தனர். கிளைச் செயலாளர் ரகுவரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தின் போது, ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் தோறும் 7-ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.