மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம்

ஊத்தங்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருத்துரிமை ஜனநாயகம் பாதுகாத்திட தமிழகம்

ஊத்தங்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருத்துரிமை ஜனநாயகம் பாதுகாத்திட தமிழகம் தழுவிய தெருமுனை பிரசாரக் கூட்டம் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டச் செயலர் மகாலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நஞ்சுண்டன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, பாஞ்சாலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர் சுந்தரராஜன் பிரசார விளக்கவுரையாற்றினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அரூரில்...
அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் நடைபெற்ற தெருமுனை பிரசாரக் கூட்டத்துக்கு இந்திய கம்யூ. கட்சியின் மாவட்ட துணைச் செயலர் கா.சி.தமிழ்க்குமரன் தலைமை வகித்தார். 
இதில் ஏஐடியுசி மாநில பொதுச்செயலர் டி.எம்.மூர்த்தி பேசுகையில், ஜி.எஸ்.டி. வரியால் சிறு மற்றும் குறுந்தொழில்கள் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை  குறையவில்லை. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் அதிகம் பாதிக்கின்றனர். சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றார்.
முன்னதாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வந்த பிரசாரக் குழுவினர் நரிப்பள்ளி, பையர்நாய்க்கன்பட்டி, தீர்த்தமலை, சங்கிலிவாடி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டனர்.
இதில்,  மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டி.லெனின், ஒன்றியச் செயலர் என்.அல்லிமுத்து, ஒன்றிய துணைச் செயலர்கள் நடராஜன், வெங்கடாசலம், பொருளர் பி.செங்கொடி, கவிஞர் ரவீந்திர பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com