கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கோவிந்தராஜ், அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி, நகரச் செயலர் கேசவன், மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை அதிகளவில் சேர்ப்பது, வாக்குச் சாவடி குழுக்களை அமைப்பது, தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.