கிருஷ்ணகிரியில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், செப்.28-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தலைமையில் செப்.28-ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில், இம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.