நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி ஒசூர் ராம் நகரில்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி ஒசூர் ராம் நகரில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்டச் செயலாளர் தமிழ்மாறன் ஆகியோர் தலைமை வகித்தனர். 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தும் ஆளுநர் காலம் தாழ்த்துவது வேதனையடைய செய்கிறது. எனவே உடனடியாக  7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும்,  தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் ராஜாமணி,  தளி தொகுதி செயலாளர் ஜெகன்,  தலைமை செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com