கோடிக்கரை ஸ்ரீ வன்னி கணபதி கோயில் கும்பாபிஷேகம்

புங்கம்பட்டி கோடிக்கரை ஸ்ரீ வன்னி கணபதி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புங்கம்பட்டி கோடிக்கரை ஸ்ரீ வன்னி கணபதி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாரூர் அருகேயுள்ள புங்கம்பட்டி கோடிக்கரை கிராமத்தில் புதியதாக ஸ்ரீ வன்னி கணபதி கோயில் கட்டப்பட்டு சனிக்கிழமை காலை யாக சாலைகள் அமைக்கப்பட்டு கலச வேள்வி பூஜை நடை பெற்றது. புனித நீர் குடங்கள் எடுத்து கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு காலை 10 மணிக்கு கந்திகுப்பம் தவத்திரு பைரவ சுவாமிகள் கோபுரக்கலசம் மீது புனித தீர்த்தங்களால் கலசத்தின் மீது ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார். ஊற்றபட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com