தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொலைத் தொடர்புத் துறைக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும், 15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன், ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும், செல்லிடப்பேசி கோபுரங்களை பராமரிப்புப் பணியில் தனியாரை பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொலைத் தொடர்புத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் சார்பில் தொடங்கிய இந்த வேலைநிறுத்தம் வருகிற பிப்.20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இப்போராட்டத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் 92 அதிகாரிகள், 246 ஊழியர்கள் கலந்து கொண்டனர். வேலைநிறுத்தப் போராட்டத்தால் பிஎஸ்என்எல் அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்தன.