மு.க.ஸ்டாலின் இன்று ஒசூர் வருகை

ஒசூரில் திமுக சார்பில் நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டம் மற்றும் ஒசூர் தொகுதி வாக்குச் சாவடி முகவர்கள்

ஒசூரில் திமுக சார்பில் நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டம் மற்றும் ஒசூர் தொகுதி வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்க சனிக்கிழமை திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகிறார். 
சென்னையில் இருந்து விமானம் மூலம் சனிக்கிழமை காலை ஒசூர் அருகே உள்ள பேளகொண்ட விமான நிலையத்துக்கு வரும் மு.க.ஸ்டாலினுக்கு, தளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலருமான ஒய்.பிரகாஷ் தலைமையில் திமுகவினர் வரவேற்பு அளிக்கின்றனர். 
பின்னர் அங்கிருந்து காரில் ஒசூர் ஒன்றியம், ராஜாஜி பிறந்த தொரப்பள்ளி கிராமத்தில் நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டத்தில் அவர் மக்களிடம் பேசுகிறார். அதன் பின்னர்,  ஒசூர் தொகுதி திமுக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். 
 பின்னர், கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். இரவு ஒசூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.  ஞாயிற்றுக்கிழமை காலை அவர் பேளகொண்டப்பள்ளி விமான நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை தளி எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், வேப்பனஅள்ளி எம்.எல்.ஏ. பி.முருகன், ஒசூர் மாநகராட்சி திமுக செயலர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட அவைத் தலைவர் அ.யுவராஜ்,  தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்ட இளைஞரணிச் செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com