போச்சம்பள்ளி அருகே விவசாயத் தொழிலாளியின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் சாம்பலானது.
போச்சம்பள்ளியை அடுத்த சந்தூர் அருகே மகாதேவகொள்ளஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த காசிராஜா என்பவரது மகன் மாதேஷ் (47). விவசாய தொழிலாளி. செவ்வாய்க்கிழமை இரவு மாதேஷ் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றபோது வீட்டில் அவரது மகள் பிரியதர்ஷினி, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டிலிருந்த பொருள்கள் சாம்பலானது. போச்சம்பள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.