நண்பரைக் கொலை செய்த வழக்கில் இளைஞர் கைது

ஒசூர் அருகே நண்பரைக் கொலை செய்த வழக்கில்இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஒசூர் அருகே நண்பரைக் கொலை செய்த வழக்கில்
இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஒசூரை அடுத்த கெலமங்கலம் தொட்ட பேளூரைச் சேர்ந்த லோகேஷ் (28), அதே பகுதியைச் சேர்ந்த குன்னய்யா (22) ஆகிய இருவரும் நண்பர்கள். கடந்த 17-ஆம் தேதி இருவரும் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் லோகேஷை கொலை செய்துவிட்டு குன்னய்யா தலைமறைவானார். இந்த நிலையில், தொட்ட பேளூர் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) சிலம்பரசனிடம் சரணடைந்த குன்னய்யாவை கெலமங்கலம் போலீஸார் கைது செய்தனர்.விசாரணையில், குன்னையாவிடம் ரூ.5 ஆயிரம் கடனாக வாங்கியிருந்த லோகேஷ், பணத்தை தரவில்லையாம். இந்த நிலையில் இருவரும் மது அருந்திய போது பணத்தை கேட்டதால் ஏற்பட்ட தகராறில் லோகேஷை குன்னய்யா கொலை செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக அக் கிராமத்தைச் சேர்ந்த மேலும் 9 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com