ஜூலை 20 மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்


அரூர்
அரூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (ஜூலை 20) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: அரூர் நகர், மோப்பிரிப்பட்டி, அக்ரஹாரம், பெத்தூர், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலை, கீரைப்பட்டி, சித்தேரி, ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.
ஒசூர்
கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஒசூர் கோட்டத்தைச் சேர்ந்த ஒசூர் மின்நகர் துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என ஒசூர் மின் வாரிய செயற்பொறியாளர் குமார் தெரிவித்துள்ளார். 
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, பழைய டெம்பிள் அட்கோ, புதிய பேருந்து நிலையம், எம்.ஜி. சாலை, நேதாஜி சாலை (பகுதி), சீதாராம் நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com