மத்தூர் அருகே கருங்கல் தூள் கடத்திய டிப்பர் லாரி புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
போச்சம்பள்ளியை அடுத்த மத்தூரில் கருங்கல் மண் கடத்துவதாக போச்சம்பள்ளி வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் போச்சம்பள்ளி வட்டாட்சியர் கோபிநாத் மத்தூர்-ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்தில் ஈடுபட்டார். அப்போது மத்தூரில் இருந்து ஊத்தங்கரை நோக்கி வேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தியபோது லாரி ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பியோடினார். சோதனையில் டிப்பர் லாரியில் கருங்கல் மண் கடத்தியது தெரியவந்தது. பின்னர் லாரியை மீட்டு போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி விசாரணை நடத்தியதில் டிப்பர் லாரியின் உரிமையாளர் ஊத்தங்கரையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.