திமுக, அதிமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு

ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள்

ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வியாழக்கிழமை முதல்கட்டமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஒசூர் தொகுதிக்குள்பட்ட பாகலூர் கோட்டை மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அதிமுக வேட்பாளர் எஸ்.ஜோதி, பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.
அப்போது, தேமுதிக ஒசூர் ஒன்றியப் பொறுப்பாளர் அப்பையா, அதிமுக மாவட்டப் பொருளாளர் நாராயணன், ஒசூர் ஒன்றிய துணைச் செயலர் ஜெயராமன், ரவிக்குமார் நாகராஜ் சூசூவாடி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஸ்ரீதர் பவித்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பேரிகையில் திமுக வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா வீதிவீதியாகச் சென்று வாக்குகளை சேகரித்தார். எஸ்.ஏ.சத்யாவை ஆதரித்து சூளகிரி வடக்கு ஒன்றியம் சூளகிரி அண்ணா நகரில் வேப்பனஹள்ளி சட்டபப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பி. முருகன், ஒன்றியச் செயலர் நாகேஷ், மாவட்ட விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் முனிசந்திரப்பா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் முருகேசன், சதாசிவம், முன்னள் ஒன்றிய துணைச் செயலர் அசோக், ரத்தன்சிங் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர். இதில், கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com