இடைத்தேர்தல்: ஒசூர் தொகுதியில் 2 சுயேச்சைகள் உள்பட 4 பேர் மனு தாக்கல்

ஒசூரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு 2 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 4 பேர் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர். 

ஒசூரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு 2 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 4 பேர் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர். 
ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர் கோட்டாட்சியர் விமல்ராஜிடம் சுயேச்சை வேட்பாளர் சின்ன எலசகிரியைச் சேர்ந்த தேவப்ப (எ) தேவேகவுடா (53) மனு அளித்தார். இதையடுத்து, கோவிந்த அக்ரஹாரத்தைச் சேர்ந்த ஜி.சி.ராமசாமி (67) சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, சிவசேனா கட்சியின் சார்பில் தேவராஜ் (40) மனு அளித்தார். இவர் சிவசேனாவில் தமிழ்நாடு மேற்கு மண்டலத் தலைவராக உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒசூர் லட்சுமி நாராயண நகர் பகுதியைச் சேர்ந்த ஓவியர் ராஜசேகர் (38) வேட்பு மனு தாக்கல் செய்தார். ஒசூரில் வெள்ளிக்கிழமை 2 சுயேச்சைகள் உள்பட நான்கு பேர்  வேட்புமனு தாக்கல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com