கிருஷ்ணகிரி பாரத் இண்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளியின் நிறுவனர் மணி தலைமை வகித்தார். தாளாளர் கிருஷ்ணவேணி மணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி பாஸ்கரன் மழலையர்களுக்கு பட்டம் அளித்து வாழ்த்தி பேசினார் . பள்ளியின் இயக்குநர் சந்தோஷ், செயலாளர் உஷா சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளியின் முதல்வர் நரேந்திரநாத் ரெட்டி, ஆசிரியர்கள் உள்ளிட்டோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.