நாமக்கல் அருகே லத்துவாடி நம்பிக்கை இல்லத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு இந் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்
தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பீ.ஏ. சித்திக், நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆர்.சி. கதிரவன், முன்னாள் நாமக்கல் நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.